எண்ணெய் வித்துகளுக்கான விலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 21 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலையின் விலை மற்றும் ஈரோட்டில் உள்ள சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய எள்ளின் விலை மற்றும், சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை தரமான நிலக்கடலையின் பண்ணை விலை ரூ.60 முதல் ரூ.65 வரையும் மற்றும் தரமான எள்ளின் பண்ணை விலை ரூ.80 முதல் ரூ.85 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003,
தொலை பேசி 0422 – 2431405,
மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
எண்ணெய் வித்துக்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 – 2450812
நன்றி: வேளாண்மை துறை